ராஞ்சியில் நம்பர் பிளேட் இல்லாமல் புல்லட் ஓட்டிய டோணிக்கு ரூ.500 அபராதம்
ராஞ்சி: போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி கடந்த திங்கட்கிழமை புல்லட் ஓட்டியுள்ளார். பாதுகாவலர்கள் இன்றி அவர் தனியாக சுமார் 3 மணிநேரம் புல்லட் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவரது வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததை பார்த்த போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். அதற்குரிய சலானை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இரு சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் டோணியின் வாகனத்தில் முன்புறத்தில் ஒரு ஓரமாக பதிவு எண் எழுதப்பட்டிருந்தது. பதிவு செய்யப்படாத நம்பர்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்வோரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள வேளையில் டோணி சிக்கியுள்ளார்.
இது குறித்து போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்திக் கூறுகையில்,
நாங்கள் டோணியின் வீட்டிற்கு சலான் அனுப்பி வைத்தோம். அவரது குடும்பத்தார் அபராதத் தொகையை செலுத்திவிட்டனர். அவர் தெரியாமல் விதிகளை மீறிவிட்டார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications