கணக்கில் காட்டாத 6000 கோடியை வைர வியாபாரி ஒப்படைத்தாரா.. இல்லையா?
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடியை அரசிடம் ஒப்படைத்தார் என்று வைரலாக பரவிய செய்தி தவறானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைர வியாபாரியான லால்ஜிபாய் பட்டேல், கணக்கில் காட்டாமல் தன்னிடம் வைத்திருந்த 6000 கோடி ரூபாய் பணத்தை அரசிடம் ஒப்படைத்தார் என்ற செய்து வைரலாக பரவியது. ஆனால் அது உண்மையான செய்தி அல்ல என்று தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 2.5 லட்சம் வரை பழைய நோட்டுக்களை மாற்றுபவர்களுக்கு எந்தவித வரியும் கிடையாது என்றும் அதற்கு மேல் பணம் மாற்றுபவர்களுக்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கையில் இருக்கும் பழைய நோட்டுகளை சாதாரண மக்கள் வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்தார் என்ற செய்தி வைரலாக பரவியது. அதாவது அவரிடம் இருந்த கணக்கில் காட்டாத பணம் 6000 கோடிக்கு 1800 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும், பின்னர், வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு அதனை செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 5400 கோடி ரூபாய் வரி பிடித்தம் செய்யப்படும் என்பதால் லால்ஜிபாய்க்கு வெறும் 600 கோடி ரூபாய்தான் கிடைக்கும். இதனால் லால்ஜிபாய் மொத்தமாக 6000 கோடி ரூபாயையும் பெரிய மனதோடு அரசிடம் ஒப்படைத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போது, அந்த செய்தி முழு பொய் என்பது தெரிய வந்தது. "தான் 6000 கோடி ரூபாயை ஒப்படைக்கவில்லை" என்று லால்ஜிபாய் படேல் மறுத்துள்ளார். ஆக, இவர் 6000 கோடியை அரசிடம் ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் இவரைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. அது, சில மாதங்களுக்கு முன்பு, மோடி, மோடி என்று பிரதமரின் பெயரிலேயே வடிவமைக்கப்பட்டு, அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த போது பிரதமர் மோடி அணிந்த நீள நிற கோட்டை 4.3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் இதே லால்ஜிபாய் படேல்தான்.












Click it and Unblock the Notifications