மும்பை தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தில் உள்ள பாக். உளவாளி உதவி- திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

Did a 'super-agent' in Delhi help ISI attack Mumbai?
மும்பை: தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தில் உள்ள பாக். உளவாளி உதவி- திடுக் தகவல்

டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தில் உள்ள பாகிஸ்தான் உளவாளி ஒருவர் உதவியதாக இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் எழுதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.

2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக தி சீஜ் என்ற புத்தகத்தை இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் இருவர் எழுதியுள்ளனர்.

அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹெட்லிக்கு பாகிஸ்தான் உளவுப் படையான ஐ.எல்.ஐ. அமைப்பு 2 ஆண்டுகள் கண்காணிப்பு பயிற்சி அளித்துள்ளது. அப்போது, ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் இக்பால், டெல்லியில் உள்ள நமது உளவாளி ஹனி பீ அனைத்து உதவிகளையும் செய்வார் என்று ஹெட்லியிடம் கூறிவந்தார்.

அந்த உளவாளிதான் இந்திய ராணுவம், காவல்துறையினர் பெற்ற பயிற்சிகளின் விவரங்களை ஐ.எஸ்.ஐ.க்கு தெரிவித்தார். தாக்குதல் நடைபெற்ற நாளன்று தெற்கு மும்பை கடலோரத்தில் அமைந்துள்ள பத்வர் பார்க் மீனவர் காலனியில் தீவிரவாதிகள் வந்து இறங்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் இருப்பது பாதுகாப்பு வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+