கட்சிக்குள் ஆதரவு இல்லை... தேர்தல் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: ஷீலா தீட்சித்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்றும், போதுமான ஆதரவு தமக்கு கட்சியிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஷீலா தீட்சித்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலில் தோல்வியடைந்த ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஷீலா தீட்சித். அதில், அவர் கூறியிருப்பதாவது....

ஆதரவு இல்லை....
‘எனக்கு எங்கள் கட்சியிடமிருந்து போதுமான ஆதரவு கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் அப்படி கிடைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

குறைத்து மதிப்பிட்டு விட்டோம்.....
ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றிபெற்று, இரண்டாவது இடத்தை கைப்பற்றி உள்ளது குறித்த கேள்விக்கு, " நாங்கள் அவர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்" என்று பதிலளித்துள்ளார்.

கெஜ்ரிவால் புத்திசாலி....
நீங்கள் போட்டியிட்ட டெல்லி தொகுதியில் உங்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்ன யோசனை சொல்ல விரும்புகிறீர்கள்? எனக் கேட்டபோது," என்னைவிட அரவிந்த் கெஜ்ரிவால் புத்திசாலியானவர்" எனத் தெரிவித்துள்ளார்.

3முறை முதல்வர்...
ஷீலா தீட்சித் இதுவரை 3 முறை முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications