வருகிறது டிஜிட்டல் கல்வி சான்றிதழ்... ஐஐடிகளில் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுத்த முடிவு
டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
டெல்லி: முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
கல்வித்துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2019ம் கல்வியாண்டு முதல் சோதனை முயற்சியாக இத்தகைய சான்றிதழை வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஐஐடிகளில் இந்த முயற்சி அமல்படுத்தப்படும் என்றும், அடுத்தப்படியாக டில்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இந்த கல்வி சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளதாகவும், இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், கல்வியை டிஜிட்டல் சங்கிலியாக இணைக்கும் ஒருமுயற்சி இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது பிரச்சனை இருக்காது என்று கருதப்படுகிறது.
கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications