திக்விஜய்சிங்குடனான உடலுறவு பற்றியெல்லாம் கேட்கிறார்களே.. கொந்தளிக்கும் 'காதலி' அம்ரிதா
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் தமது காதலருமான திக்விஜய்சிங்குடன் உடலுறவு வைத்துக் கொண்டீர்களா? என்றெல்லாம் ட்விட்டரில் கேள்வி எழுப்புகின்றனர் என்று அவரது காதலியும் பெண் பத்திரிகையாளருமான அம்ரிதா ராய் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 67 வயது திக்விஜய்சிங்கின் மனைவி கடந்த ஆண்டு காலமானார். மனைவி காலமான நிலையில் ராஜ்யசபா டிவியின் செய்தி தொகுப்பாளர் அம்ரிதா ராயுடன் காதல் வயப்பட்டார் திக்விஜய்சிங்.
தனது வயதில் பாதி கூட இருக்காத அம்ரிதாவுடன் ஏடாகூடமாக திக்விஜய்சிங் இருக்கும் படங்கள் பலவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதே நேரத்தில் திக்விஜய்சிங்கோ, குஜராத் முதல்வர் மோடி தமது மனைவி விவகாரத்தை மறைத்தது பற்றி தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்தார்.

அதற்கு பதிலடியாக அம்ரிதா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. இதற்கும் அசராத திக்விஜய்சிங், ஆமாம்.. அம்ரிதாவும் நானும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்.. அம்ரிதாவின் விவகாரத்துக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார். அம்ரிதாவும் அதை ஆமோதித்து ட்விட்டரில் பதிவு போட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அம்ரிதா பதிவு செய்த ட்விட்டர் பதிவு ஒன்றில், "திக்விஜய்சிங்குடன் உடலுறவு வைத்துக் கொண்டீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.. அது உங்களோட வேலை இல்லை.. நாங்கள் திருமணம் செய்ய இருக்கிறோம். அதனால் மற்றவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கவும் என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
So many sanghi ppl abusing me, asking me.. Did you had SEX with Digvijaya Singh? It's none of ur business. We are getting married so shut up
— Amrita Rai (@AmritaRai_) April 30, 2014 மோடி மீதும் காட்டம்
அத்துடன் தங்களை விமர்சிக்கும் நபர்களின் தலைவர், கடந்த காலத்தில் திருமணம் செய்து விட்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழாமல் இருக்கிறார்.. அவரிடம் போய் இப்படியான கேள்விகளைக் கேளுங்கள் என்றும் காட்டம் காட்டியிருக்கிறார்












Click it and Unblock the Notifications