எச் ராஜாவை போலீஸ் கைது செய்யாது - தினகரன் பரபரப்பு பேட்டி
பெங்களூர்: மாணவி சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச் ராஜாவை கைது செய்ய போலீஸார் காட்ட மாட்டார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை
டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சசிகலா சிறையில் நலமுடன் உள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் கன்னடம் கற்றுக் கொள்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் 3-ஆவது நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார்.

மக்கள்
நீதிமன்றங்கள் தொடர்பாகவே கேள்வி கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும். எச் ராஜாவை எப்படி போலீஸார் கைது செய்வர். அவரை கைதே செய்ய மாட்டார்கள். அமைச்சர் உதயகுமார் ஏதோ காமெடியா பேசுனதை எல்லாம் கேள்வியாக கேட்டு உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்காதீர். இதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.

13 பேர் பலி
சுவாசிக்க சுத்தமான காற்று வேண்டும், குடிக்க சுத்தமான தண்ணீர் வேண்டும் என கேட்டு போராடிய மக்களை ஏதோ குருவியை சுடுவது போல் இந்த காவல் துறை சுட்டுவிட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.

ராஜா கைது
சோபியாவை கைது செய்ய காட்டுற வேகத்தை நீதிமன்றத்தை அவமதித்து பேசிய எச் ராஜா மீது போலீஸார் காட்டாதது ஏன். தற்போது மாநிலத்தில் அடிமை அரசாங்கம் நடைபெறுகிறது. அதனால் நிச்சயம் ராஜாவை கைது செய்யமாட்டார்கள்.

தேவையில்லாத கொந்தளிப்பு
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பெரிய ஆளாக்காதீர். அவர் பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எச் ராஜா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தேவையில்லாத முயற்சி. அது தேவையில்லாத கொந்தளிப்பை தமிழகத்தில் உருவாக்கும்.

நல்ல தீர்வு
வாழ்வாதாரத்துக்காக மட்டுமே ஸ்டெர்லைட்டை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடினர். எனவே இவர்கள் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 8 வழிச்சாலை திட்டத்துக்கு செலவிடும் பணத்தை ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவதற்கும் மழை நீரை சேமித்து வைப்பது போன்றவற்றுக்கு செய்யலாம். இன்னும் 6 மாதத்துக்கு பல்லை கடித்துக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் மாநில , மத்திய அரசுகளுக்கு எதிராக வாக்களிப்பர். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications