சர்ச்சைக்குரிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி தேவ்யானி கோப்ரகடே திடீர் பணி நீக்கம்!
டெல்லி: குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதை மறைத்த சர்ச்சைக்குரிய அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே, அமைச்சகப் பணியில் நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றியவர் தேவ்யானி கோப்ரகடே. அப்போது, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதா என்பவரை கொடுமைப்படுத்தி வேலை வாங்கியதாக அந்த பெண் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, விசா மோசடி வழக்கும் தேவ்யானி மீது சேர்ந்து கொண்டது. அந்த வழக்கில் தேவ்யானி கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இவ்வழக்கில், தேவ்யானி ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இந்தியா திரும்பினார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேவ்யானி அண்மையில் தனது தந்தை மீதான ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், தனது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பது குறித்தும் கடந்தவாரம் என்டிடிவி ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதுகுறித்து அறிந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் ஊடகத்திற்கு பேட்டியளித்தது மற்றும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும், அமெரிக்க குடியுரிமை பெறப்பட்டதை இதுவரை அமைச்சகத்திடம் தெரிவிக்காமல் மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக அவர் இப்போது வகித்து வந்த கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர்மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications