சென்னை நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்சம்.. இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் கைது
டெல்லி / சென்னை: சென்னை நர்சிங் கல்லூரிகளில் ரூ35 லட்சம் லஞ்சம் கேட்டதாக இந்திய தணிக்கைத் துறை இயக்குநர் பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தணிக்கைத்துறையில் இயக்குனராக பணியாற்றிய பரமசிவம் சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்ச கேட்டார். மேலும், முன்தொகையாக ரூ.5 லட்சத்தை சென்னையில் உள்ள தன் மைத்துனர் டாக்டர் சிவராமிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.பி.ஐ. போலீசாரிடம் நர்சிங் கல்லூரி நிர்வாகி ஒருவர் புகார் செய்தார். அதனடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சிவராம் லஞ்ச பணம் ரூ.5 லட்சத்தை வாங்கும்போது, அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர், அவரை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து டாக்டர் சிவராமை வருகிற மே 2ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி வணங்காமுடி உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்த பரமசிவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை, டெல்லி மற்றும் நொய்டாவில் சோதனையில் ஈடுபட்டனர்.
பரமசிவனின் வீட்டில் சோதனை செய்த போது ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications