For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ., ரஜினியை விட ஷங்கர் தி கிரேட் என்ற ராம்கோபால் வர்மா கைது?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஜெயலலிதா, ரஜினியை விட ‘ஷங்கர் தி கிரேட்' என்று கூறிய இயக்குனர் ராம்கோபால்வர்மாவை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

‘சிவா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் கதையாசிரியராகவும் தன் திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் ராம் கோபால் வர்மா.

Director Ram Gopal Varma Arrested by Hyderabad Police ?

1989ஆம் ஆண்டு வெளியான தன் முதல் படத்திலேயே பல விருதுகளை வென்றார். சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படம் ஆகியவற்றிக்காக ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது இப்படம்.

தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இவர். இவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘ரத்த சரித்திரம்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இவரது பெரும்பாலான படங்கள் மற்றும் இவரது கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாவது சகஜம். சிலசமயம் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, சிக்கலில் மாட்டிக்கொள்வார்.

சமீபத்தில் ‘ஐ' திரைப்படத்தைப் பற்றி கூறிய ராம்கோபால் வர்மா, ஜெயலலிதா, ரஜினியை விட ‘ஷங்கர் தி கிரேட்' என்று கூறியிருந்தார்.

தற்போது இவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.

இவர் அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கிகொள்வதால், இவரது கைதை பெரிதுப்படுத்தவில்லை பெரும்பாலான சினிமா ரசிகர்கள். மேலும், சில ரசிகர்கள் இது ஏதாவது படத்தின் ஷுட்டிங்காக இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

English summary
The controversial director Ram Gopal Varma was seen arrested by the Telangana state police in Hyderabad. The reason is unknown as of now. Bizarrely, Ram Gopal Varma himself tweeted 'I have just been arrested' and shared the image in the micro-blogging website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X