வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – பிப்ரவரி 20ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து பிப்ரவரி 20 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய தொழிலாளர் தலைமை ஆணையர் பி.பி.மித்ரா தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், வங்கி நிர்வாக தரப்பு இடையே ஆலோசனை நடத்தப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை கோரி பிப்ரவரி 25-28 வரை வங்கி ஸ்டிரைக் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications