Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வெடி போட வேற இடமே கிடைக்கலையா'.. அர்ச்சுனன் தபசு சிலை மீது பட்டாசு வெடித்த நபர்கள்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: பாரம்பரிய நினைவுச்சின்னமான மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிலையில் சிலர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே மாமல்லபுரம் உள்ளது. இங்கு பல்லவர் கால்த்தில் உள்ள சிற்பங்கள் உள்ளன.

7 மற்றும் 8 ஆம் நுற்றாண்டுகளில் பல்லவ வம்ச அரசர்களால் இந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அர்ச்சுனன்தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, புலிக்குகை உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன.

 பாரம்பரிய நினைவு சின்னம்

பாரம்பரிய நினைவு சின்னம்

ஐக்கிய நாடுகள் அவையின் கலாசார பிரிவும் இதை பாரம்பரிய நினைவு சின்னமாக அங்கீகரித்துள்ளது. இந்த சிற்பங்களை காண்பதற்காக தமிழகம் மற்றும் வெளி மாநில சுற்றுலாப்பயணிகள் மட்டும் இன்றி வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் விடுமுறை தினங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி பண்டிகை தொடங்கியுள்ளதால் இங்கு கூட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் கூட தமிழகம் வந்தால் மாமல்லபுரம் செல்வதைக் காண முடியும்.

காதல் சின்னங்களை வரைவது

காதல் சின்னங்களை வரைவது

சீன அதிபர் ஜி ஜின்பிங் கூட பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்துப் பேசியதோடு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்டவைகளை வியந்து பார்த்தார். சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. இந்த சுற்றுலாதலங்களை பார்வையிட வரும் காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நினைவுச்சின்னங்களில் தங்கள் பெயர்களை எழுதுவது காதல் சின்னங்களை வரைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

மது அருந்துவது

மது அருந்துவது

இன்னும் சொல்லப்போனால் ஒரு படி மேலே சென்று நினைவுச்சின்னங்கள் மீது அமர்ந்து மது அருந்துவது என எல்லை மீறும் சம்பவங்களும் நடைபெற்றன. இது பெண் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையிலும் இருந்தது. இதனால், இத்தகைய அத்துமீறல்களை தடுக்கும் விதமாக தொல்லியல் துறை சார்பில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது.

பட்டாசு வெடித்தனர்

பட்டாசு வெடித்தனர்

இதனால், இத்தகைய சம்பவங்கள் அங்கு குறைந்த நிலையில், தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். சரவெடி பட்டாசுகளை வெடித்ததில் சில பட்டாசுகள் அர்ச்சுனன் தபசு யானை சிலை மீதும் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அர்ச்சுனன் தபசு பகுதியில் கருமை நிறம் படிந்தது. காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்றும் புராதான சின்னங்களை பாதுகாப்பதில் தொல்லியல் துறை அலட்சியம் காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாதுகாப்பு பணி அதிகரிப்பு

பாதுகாப்பு பணி அதிகரிப்பு

இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும் போது, ''புராதான சின்னங்கள் அருகே பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. ஆனால் தடையை மீறி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பட்டாசு வெடித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கப்படும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு அங்கு போடப்படும்'' என்றனர். தீபாவளி பண்டிகை காரணமாக மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+