Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோமியத்தில் டோஸ்.. எதிரிகளுடனே போஸ்! டிகே சிவகுமார் அருகே யாரு தெரியுதா? குழப்பும் கர்நாடக டிராமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று இருக்கும் நிலையில், தேர்தலின்போதும் அதற்கு முன்பும் பரம எதிரிகள் போல் இருந்த பாஜகவினருடன் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தற்போது நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்து இருக்கிறது.

DK Shivakumar meets Basavaraj Bommai and former minister Ashok after election end

பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை சித்தராமையா கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

துணை முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே டிகே சிவகுமார் பலரை சந்தித்து வருகிறார். குறிப்பாக கட்சி பாகுபாடு இன்றி காங்கிரஸ், பாஜக தலைவர்களை அவர் சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தனது உறவினரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், தற்போது பாஜக மூத்த நிர்வாகியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார் டிகே சிவகுமார். அத்துடன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை, பாஜக முன்னாள் அமைச்சர் அசோக் ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார் டிகே சிவகுமார். பசவராஜ் பொம்மையை கட்டி அணைத்தபடியும், அசோக் தோளில் கைபோட்டுக்கொண்டு சிரித்தபடியும் டிகே சிவகுமார் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக சட்டசபைத் தேர்தலின்போதும், பசராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியின்போதும் இவர்கள் பரம எதிரிகளைபோல் காட்சி தந்தனர். குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் மஜத - காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பின்போது டிகே சிவகுமாரின் செயல்பாடுகள் இதனை உணர்த்தும் வகையில் இருந்தன. சிவகுமார் மீதான மத்திய புலனாய்வு நிறுவனங்களின் நடவடிக்கைகளும் இதையே காட்டின.

கடந்த ஜனவரி மாதம் பேசிய டிகே சிவகுமார், "பாஜக கர்நாடகாவில் தங்கள் கூடாரத்தை விரைவில் காலி செய்வார்கள். ஊழல் ஆட்சிசெய்து கர்நாடக சட்டப்பேரவையை பாஜகவினர் மாசுபடுத்தி உள்ளனர். நாங்கள் கோமியம் கொண்டு அதை துய்மைப்படுத்துவோம்." என்றார். இந்த நிலையில் சொன்னபடியே இன்று காலை கோமியம் கொண்டு கர்நாடகாவின் சட்டப்பேரவை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர் தூய்மைப்படுத்தினர்.

இதன் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகும் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர் அரசியலை காங்கிரஸ் கையில் எடுத்து இருப்பதாக தொண்டர்கள் கருதிய நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே பசவராஜ் பொம்மை, அசோக், டிகே சிவகுமாரின் சந்திப்பு இரு கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்து உள்ளது. இதில் குறிப்பாக முன்னாள் அமைச்சர் அசோக் உடனான சந்திப்பு சர்பிரைஸ் பேக்கேஜாக அமைந்துள்ளது.

DK Shivakumar meets Basavaraj Bommai and former minister Ashok after election end

அதற்கு காரணம் டிகே சிவகுமாரை கனகபுரா தொகுதியில் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, அவர் சார்ந்த வொக்காலிகர் சமுதாயத்தை சேர்ந்த அசோக்கை அவருக்கு நிறுத்தியது பாஜக. ஆனால், அதில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றார் டிகே சிவகுமார். அசோக் டெபாசிட் இழந்தார். அதே நேரம் அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பத்மனாபநகர் தொகுதியில் அசோக் வென்றார்.

இப்படி தன்னை வீழ்த்த வேண்டும் என 2 தொகுதிகளில் போட்டியிட்டவருடனே டிகே சிவகுமார் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஒரு பக்கம் நாகரீக அரசியல் என்று கூறினாலும் மறுபக்கம் எல்லாம் டிராமா என்ற விமர்சனமும் எழுகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியலுக்கு வெளியில் நல்ல உறவோடு இருப்பது வழக்கம் என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் உக்கிரமான மோதல்களை சந்தித்த பிறகும் இத்தகைய நட்பு தொடர்வது வினோதமானதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+