சுற்றிச்சுழலும் அரசியல் பிரச்சினைகள் – குடும்பத்துடன் ஷீரடி சாய் கோவிலில் விஜயகாந்த் தரிசனம்!
மும்பை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன், திடீர் ஆன்மீகப் பயணமாக ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். இந்நிலையில், விஜயகாந்த், நேற்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ், மகன்களுடன் ஷீரடிக்கு திடீர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்ற விஜயகாந்த் குடும்பத்தினர், அங்கிருந்து புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்பு, அங்கிருந்து இன்றே சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
சமீப நாட்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அரசியல் ரீதியாக சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதாலும், அதை தடுக்கும் விதமாகவும், தனது நீண்ட நாள் விருப்பமான ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.