ஜெயலலிதா பதவியேற்பு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தே.மு.தி.க. மனு!!
டெல்லி: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தே.மு.தி.க. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யபபட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் தே.மு.தி.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்து அளித்துள்ள தீர்ப்பில் குளறுபடி உள்ளது. கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
நான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் மனு ஒன்றை சுப்ரீம் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications