ஏடிஎம் மையத்திற்கு 'இசெட் டபுள் பிளஸ்' பாதுகாப்பு?
ஹைதராபாத்: பிரதமர், தீவிரவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியோர் உள்ளிட்ட நாட்டின் அதி முக்கியமானவர்களுக்குதான் இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவது வழக்கம்.
எக்ஸ், ஒய், இசெட் என்று பாதுகாப்பில் பல வகைகள் இருந்தாலும், இசெட் பிளஸ்தான் இருப்பதிலேயே உச்சகட்ட பாதுகாப்பு கேடயமாகும். ஆனால் ஆந்திராவிலுள்ள ஒரு வங்கி ஏடிஎம் முன்பாக குவிந்திருக்கும் 'பாதுகாவலர்களை' பார்த்தால், இது இசெட் டபுள் பிளஸ் பாதுகாப்பு கொண்ட ஏடிஎம் போல காட்சியளிக்கிறது.

தெரு நாய்களின் பெருக்கத்தால் மனிதர்கள் அடையும் தொல்லைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட போட்டோ ஒன்றுதான் இது. இப்படி வளைச்சி வளைச்சி நாய்கள் படுத்திருந்தால், அவசரத்திற்கு ஏடிஎம்முக்குள் எப்படி வாடிக்கையாளர் சென்று பணத்தை எடுக்க முடியும்? வேறு வங்கி ஏடிஎம்ல பணம் எடுத்தால் பணத்தை கட் செய்ய ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் இப்படியெல்லாம் நாய்களை சுதந்திரமாக திரிய விடலாமா? உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?












Click it and Unblock the Notifications