‘தொடரி’ தனுஷ் மாதிரி கேஷூவலாக ரயில் மீது ஓடி விளையாடிய நாய்... 1100 கிமீ பயணித்த ஆச்சர்யம்!
சுமார் 1100 கிமீ ரயில் மேற்கூரையில் பயணித்து நாய் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: ஹைதராபாத் ரயிலின் மேற்கூரையில் ஓடி விளையாடியவாறு, 1100 கிமீ தூரம் நாய் ஒன்று பயணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் நாய் ஒன்று, திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது விளையாட்டுத்தனமாக ஏறியுள்ளது. ஆனால், இதனை ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
ரயில் வேகமாகச் செல்லத் தொடங்கியும் பயப்படாத அந்நாய், உற்சாகமாக ரயிலின் மீது ஓடி விளையாடியுள்ளது. ரயில் வேகமாகச் செல்லும் போது, இரு பெட்டிகளுக்கு இடையேயுள்ள பகுதியில் லாவகமாக அமர்ந்து கொண்ட நாய், பின்னர் ரயிலின் மேற்கூரையில் இங்கும் அங்கும் ஓடியுள்ளது.

சி.ஆர்.பி.எப். வீரர்கள்:
இதனை ரயிலின் ஒரு பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் பள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுராஜ், வினோஸ் ஆகியோர் கவனித்துள்ளனர். ரயிலின் மேற்கூரையில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த அவர்கள், அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது இறங்கி மேலே பார்த்து அதிர்ந்துள்ளனர்.

மீண்டும் புறப்பட்ட ரயில்:
இருவரும் சேர்ந்து அந்நாயை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களை கடிப்பது போல் ஆக்சன் செய்து அந்த நாய் மிரட்டியுள்ளது. இதற்குள் ரயில் மீண்டும் புறப்பட்டு விடவே, அவர்கள் அடுத்த ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு மீண்டும் ரயில் பெட்டிக்குள் ஏறிக் கொண்டனர்.

தொடர் தோல்வி:
அடுத்த ரயில் நிலையம் வந்தபோது அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் நாயை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களாலும் நாயை விரட்ட முடியவில்லை. இதனால் அடுத்து வந்த ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நாயை விரட்டும் முயற்சி தொடர்ந்தது. ஆனால், நாய் அசரவேயில்லை. அனைவரையும் கடிப்பது போன்று பாய்ந்து விரட்டியது.

உயரழுத்த மின்கம்பிகள்:
இப்படியாக ஏறக்குறைய 20 மணி நேரம் ரயிலின் மேற்கூரையிலேயே அந்த நாய் பயணம் செய்தது. பின்னர் மறுநாள் காலை 10.30 மணியளவில் அந்த ரயில் பாலக்காடு ஒலவக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து கேரளா செல்லும் பாதையில் மிக உயரழுத்த மின் கம்பிகள் இருப்பதால் இனிமேல் மேற்கூரையில் பயணம் செய்தால் நாய்க்கு ஆபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மீண்டும் புறப்பட்டது:
இதையடுத்து ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் வினோஸ் லாவகமாக மேற்கூரையில் இருந்த நாயின் காலை பிடித்து கீழே தூக்கி வீசினார். இதில் லேசான காயமடைந்த நாய், அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. நாய் கீழே இறங்கியதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் தாமதமாக அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.

பயணிகள் ஆச்சர்யம்:
மொத்தம் 1100 கிலோ மீட்டர் தூரத்தை ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் பயணம் செய்து கடந்துள்ளது அந்நாய். இது அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications