எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், ஜம்மு காஷ்மீருக்கு உதவுங்கள்: மோடி வேண்டுகோள்
டெல்லி: எனது பிறந்தநாளை கொண்டாடாமல் ஜம்மு காஷ்மீர் நிவாரண பணிக்கு உதவி செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட பாஜக தொண்டர்கள், மக்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இது குறித்து அறிந்த மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நண்பர்களும், நலம் விரும்பிகளும் பல்வேறு இடங்களில் எனது பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாக கேள்விப்பட்டேன். தயவு செய்து எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் நிவாரண பணிகளுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவ பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுமாறு மக்களை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications