ஆண் துணையின்றி பெண்கள் தனியாக திருப்பதிக்கு வரவேண்டாம் - தேவஸ்தானம் எச்சரிக்கை
திருமலை: வெளியாட்களை நம்பி திருப்பதிக்கு பெண்கள் தனியாக வரவேண்டாம் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, "திருப்பதி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. தேவஸ்தான உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை இரவும், பகலும் கஷ்டப்பட்டு உழைத்தனர்.

இதன் பயனாக பக்தர்கள் எந்தவித சிரமும் இன்று வாகன சேவை மற்றும் மூலவரை தரிசித்தனர். பக்தர்களுக்கு தரிசனம், அன்னதானம், தங்கும் இடம், குடிநீர், போக்குவரத்து, லட்டு பிரசாதம் விநியோகம் என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டன. இந்த அனுபவத்தின் மூலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை மேலும் சிறப்பாக நடத்துவோம்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளன்று காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பெண்கள், ஆண் துணையின்றி திருமலைக்கு வந்தனர். அவர்கள் முன்பின் தெரியாத ஒருவரை நம்பி அவர் கொடுத்த டீயை குடித்துள்ளனர்.
பின்னர் அவர் எடுத்து கொடுத்த அறையில் இருந்த அவர்களின் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போயின. எனவே ஆண் துணையின்றி பெண்கள் தனியாக திருமலைக்கு வந்து வெளி ஆட்களை நம்பி ஏமாற வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications