வந்தே மாதரம் சொல்லனும்னா இந்தத் தகுதிகள் வேண்டும்... பிரதமர் மோடி ஆற்றிய உரை!
பெண்களை அவமதிப்பவர்கள், தூய்மையை கடைபிடிக்காதவர்கள் வந்தே மாதரம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையில்லாதவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லி : பெண்களை அவமதிப்பவர்கள், தூய்மை பற்றி கவலைப்படாதவர்கள் வந்தே மாதரம் என்ற வார்த்தை சொல்ல தகுதியற்றவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரை நிகழ்த்தியதன் 125வது ஆண்டு தினம் தினதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை மன்னிட்டு டெல்லியில் மாணவர் மாநாடு நடைபெற்றது, இளைய இந்தியா, புதிய இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமரின் உரையை நேரலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கேட்பதற்காக சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது : "மக்கள் வந்தே மாதரம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் பெண்களை மதிக்கிறோமா?".

யாருக்கு தகுதி?
"உங்களுக்கு வந்தே மாதரம் என்று சொல்ல உரிமையிருப்பதாக நினைத்தால் இந்த கேள்வியை 50 முறை சிந்தித்து பாருங்கள். நம் பூமித் தாய் மீது எச்சில் உழிழ்கிறோம், அனைத்து குப்பைகளையும் வீசுகிறோம், ஆனால் இறுதியில் வந்தே மாதரம் சொல்கிறோம். நாட்டை அசுத்தப்படுத்தும் யாருக்கும் வந்தே மாதரம் என்று சொல்லும் தகுதி கிடையாது. துப்புறவுத் தொழிலாளர்கள் மட்டும் தாய்நாடு என்று சொல்லும் முதல் உரிமை பெற்றவர்கள்.
|
தூய்மை இந்தியா
தேசப்பற்றின் முக்கிய நோக்கமே நாட்டிற்காக உழைப்பது தான். கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தும் போது சில உறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் கல்லூரியை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்ற உறுதியை மாணவர்கள் தருவார்கள் என்று காத்திருக்கிறேன். இளைஞர்கள் எந்திரங்கள் போல இருப்பதை நான் விரும்பவில்லை. கல்லூரிகளில் ரோஸ் டே கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்
கோவில் கட்டுவதற்கு முன்னதாக இளைஞர்கள் முதலில் கழிப்பறையை கட்ட வேண்டும். சுகாதாரமான இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது.

இலக்கை நோக்கி
கடந்த 2014ம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கழிப்பறை வசதி என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த திட்டம் 2019ல் முடிவடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications