வந்தே மாதரம் சொல்லனும்னா இந்தத் தகுதிகள் வேண்டும்... பிரதமர் மோடி ஆற்றிய உரை!
பெண்களை அவமதிப்பவர்கள், தூய்மையை கடைபிடிக்காதவர்கள் வந்தே மாதரம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையில்லாதவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லி : பெண்களை அவமதிப்பவர்கள், தூய்மை பற்றி கவலைப்படாதவர்கள் வந்தே மாதரம் என்ற வார்த்தை சொல்ல தகுதியற்றவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரை நிகழ்த்தியதன் 125வது ஆண்டு தினம் தினதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை மன்னிட்டு டெல்லியில் மாணவர் மாநாடு நடைபெற்றது, இளைய இந்தியா, புதிய இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமரின் உரையை நேரலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கேட்பதற்காக சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது : "மக்கள் வந்தே மாதரம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் பெண்களை மதிக்கிறோமா?".

யாருக்கு தகுதி?
"உங்களுக்கு வந்தே மாதரம் என்று சொல்ல உரிமையிருப்பதாக நினைத்தால் இந்த கேள்வியை 50 முறை சிந்தித்து பாருங்கள். நம் பூமித் தாய் மீது எச்சில் உழிழ்கிறோம், அனைத்து குப்பைகளையும் வீசுகிறோம், ஆனால் இறுதியில் வந்தே மாதரம் சொல்கிறோம். நாட்டை அசுத்தப்படுத்தும் யாருக்கும் வந்தே மாதரம் என்று சொல்லும் தகுதி கிடையாது. துப்புறவுத் தொழிலாளர்கள் மட்டும் தாய்நாடு என்று சொல்லும் முதல் உரிமை பெற்றவர்கள்.
|
தூய்மை இந்தியா
தேசப்பற்றின் முக்கிய நோக்கமே நாட்டிற்காக உழைப்பது தான். கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தும் போது சில உறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் கல்லூரியை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்ற உறுதியை மாணவர்கள் தருவார்கள் என்று காத்திருக்கிறேன். இளைஞர்கள் எந்திரங்கள் போல இருப்பதை நான் விரும்பவில்லை. கல்லூரிகளில் ரோஸ் டே கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்
கோவில் கட்டுவதற்கு முன்னதாக இளைஞர்கள் முதலில் கழிப்பறையை கட்ட வேண்டும். சுகாதாரமான இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது.

இலக்கை நோக்கி
கடந்த 2014ம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கழிப்பறை வசதி என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த திட்டம் 2019ல் முடிவடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications