குளு குளுன்னு குத்தால சீசன் போல கூலா இருக்கும் பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. குற்றால சீசசன் போன்று தட்பவெட்ப நிலை மிகவும் இதமாக உள்ளது.
பெங்களூரில் கடந்த சில வாரங்களாக சூரியன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வெயில் வருவதும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக உள்ளது. மாலை வேளையில் குளிர் வாட்டி எடுக்கிறது.
இந்நிலையில் இன்று காலை பெங்களூரின் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. குற்றாலத்தில் சீசன் வந்தது போல் பெங்களூரில் தட்பவெட்ப நிலை இதமாக உள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக பெங்களூர்வாசிகள் லாரி, லாரியாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். கடைகளுக்கு சென்றால் சென்னைக்காக பொருட்கள் வாங்கும் நபர்களை அதிக அளவில் பார்க்க முடிந்தது.
சென்னை மக்களுக்காக பெங்களூர் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது.