நொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு போதை பொருட்கள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில், 1,818 கிலோ எடை சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றிய தகவல்களை தெரிவித்த மாதவ் சிங் என்ற அதிகாரி, கடந்த சிலநாட்களுக்கு முன் டெல்லி விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்கா பெண் பயணி ஒருவர், 24.7 கிலோ எடை கொண்ட சூடோஎபிட்ரின் (pseudoephedrine)என்ற போதை மருந்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். இது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இந்த பொருள்தான் போதை மருந்து தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள்.
அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள வீடு ஒன்றில் ஏராளமான போதை பொருட்கள் மற்றும் மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 1,818 கிலோ சூடோஎபிட்ரின் மூலப்பொருள் பொட்டலம் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு ரூ.24 கோடி மதிப்புள்ள கொகைன் போதை மருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின் போது அந்த வீட்டிலிருந்த நைஜீரிய நாட்டு ஆணும், பெண்ணும் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் அவர்கள் வீட்டு புரோக்கர் மூலம் அந்த வீட்டை தாம் வாடகைக்கு விட்டதாகவும், அங்கு நடந்து வந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தமக்கு தெரியாது என்றும் கூறினார்.
மேலும் கடந்த 1 வருடமாகவே அந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் எனக்கு வீட்டு வாடகையை கொடுக்கவில்லை. இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் கூறியதாக அதிகாரி மாதவ் சிங் தெரிவித்தார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications