சஸ்பென்ட் செய்யப்பட்ட 5 அலுவலர்களை மீண்டும் பணியில் சேர்த்தார் ஸ்மிருதி இரானி
டெல்லி தனது கல்வி தகுதி குறித்த விபரங்களை வெளியிட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரையும் ஸ்மிருதி இரானி மீண்டும் பணிக்கு சேர்த்துள்ளார்.
சஸ்பெண்ட்டை திரும்பப் பெற்றாலும், இது தொடர்பாக விளக்கம் தர டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் ஸ்மிருதி இரானி, கடந்த ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்தாலும் தேர்வு எழுதவில்லை என்ற செய்தியை இந்தி பத்திரிகை ஒன்று அவரது பல்கலைக் கழக அடையாள அட்டையுடன் வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, ரகசிய காப்பு விதிமுறைகளை மீறியதாக 5 அதிகாரிகளை டெல்லி பல்கலைக்கழகம் தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.
விசாரணையில், அவர்கள் 5 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவருக்கு கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இரானி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறினார்.
இதற்கு பா.ஜ.க உடனடியாக தனது கண்டனத்தை தெரிவித்தது. இரானியை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது துரதிருஷ்டவசமானது, அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவார் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து கூறிய மத்திய ஜவுளித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், ''உங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்ன? என்று காங்கிரசாரை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேள்வி எழுப்பினார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
''என் கல்வித்தகுதியை பார்க்காதீர்கள், எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் எனது செயல்பாடு எப்படி உள்ளது? என்பதை பொருத்திருந்து பாருங்கள்" என்று கூறி ஸ்மிருதி இரானி கூறி இந்த பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
5 பேர் பணிநீக்கம்
இந்நிலையில், அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் கல்வித்தகுதி தொடர்பான ஆவணங்களை கசியவிட்ட டெல்லி பல்கலைக்கழக அலுவலர்கள் 5 பேர் நேற்று தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநீக்கம் ரத்து
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட்டை திரும்பப் பெற்றாலும், இது தொடர்பாக விளக்கம் தர டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.
திக்விஜய் சிங் நன்றி
அமைச்சரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். அமைச்சரின் உண்மையான கல்வித்தகுதியை இப்போது நாடே அறிந்துகொண்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications