உ.பி. 'பெண்' சகாயம் துர்கா சக்தி நாக்பாலின் ஐ.ஏ.எஸ்.கணவர் சஸ்பென்ட்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நேர்மையான அதிகாரியான துர்கா சக்தி நாக்பாலின் ஐ.ஏ.எஸ். கணவர் அபிஷேக் சிங்கை அம்மாநில அரசு சஸ்பென்ட் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மணல் மாபியாக்களை மடக்கி துணிச்சலான அதிகாரி என பெயர் எடுத்தவர் துர்கா சக்தி நாக்பால். இதனாலேயே அம்மாநில அரசால் பழிவாங்கப்பட்டார். பின்னர் அரசுப் பணியிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில் தலித் ஆசிரியர் ஒருவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக துர்கா சக்தி நாக்பாலின் கணவரான ஐ.ஏ.எஸ் அதிகாரி அபிஷேக் சிங்கை அம்மாநில அரசு இன்று சஸ்பென்ட் செய்துள்ளது. அவர் மதுரா மாவட்டத்தில் மகாவான் என்ற பகுதியில் பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications