பீகார் துர்க்கா கோயிலில் 101 வருடங்களாக அணையாமல் எரியும் தீபம்
பாட்னா: பீகாரில் உள்ள துர்க்கா பரமேஸ்வரி கோயில் ஒன்றில் 101 ஆண்டுகளாக, தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டுள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், உள்ளது அகண்ட்வாஷினி கோயில். இங்கு, துர்க்கா தேவி முக்கிய தெய்வம். 1914ம் ஆண்டு ஜூன் மாதம் அசாமில் இருந்து ஒரு தீபத்தை கொண்டுவந்து துர்க்கா தேவி சிலை முன்பு தீபமேற்றி வைத்தனர். இன்று வரை அந்த தீபம் சுடரொளியுடன் எரிந்து கொண்டுள்ளது.
தற்போது இந்த கோயிலின் பூஜாரியாக இருப்பவர் பசுகினத் திவாரி. அவரது தாத்தா, விஸ்வநாத் திவாரிதான், இந்த தீபத்தை முதலில் ஏற்றியவராம். மூன்று தலைமுறைகளாக தீபத்தை அணையாமல் பார்த்துக்கொள்கின்றனர், கோயில் பூஜாரிகள்.
இதுகுறித்து பசுகினத் திவாரி கூறுகையில் "இந்த கோயிலில் அனைத்து ஜாதியினரும் வந்து கும்பிட்டுவிட்டுச் செல்லலாம். எனது தாத்தா காலத்தில் இருந்தே இங்கு ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது. அம்மன் அனைவருக்கும் சமமானவள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். செவ்வாய் மற்றும் நவராத்திரி தினங்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்" என்றார்.
சொந்த செலவில் அல்லது உண்டியலில் சேரும் பணத்தை வைத்து கோயில் பராமரிப்பு, தீபத்துக்கான எண்ணை செலவை பூஜாரி குடும்பம் ஈடுகட்டிக்கொள்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications