அசாமில் 5.0 ரிக்டர் நிலநடுக்கம் ... கட்டடங்கள் குலுங்கின
அசாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
Subscribe to Oneindia Tamil
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 7.40 மணியளவில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7.40 மணியளவில் கரிம்காஞ்ச் என்ற பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் சேதமோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு மாநிலமான அசாமில் இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் வரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கார்பி அங்லாங் மாவட்டத்தில் பூமிக்குள் சுமார் 100 கிலோமிட்டர் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டு பீதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications