சட்டசபை தேர்தல் நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் நில நடுக்கம்.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஓட்டுப் போட தயாராகி வந்த வேளையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில், 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் 38 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல், இன்று தொடங்கியது. ஆனால், அங்கு அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு மகக்ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து 9 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications