அந்தமான் தீவுகளில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 4.3 ஆக பதிவு!
Subscribe to Oneindia Tamil
போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிரவைத்தது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 அலகுகளாக பதிவாகி இருந்தது.
நேபாளத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நேற்று அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நேபாளம், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும் அதிரவைத்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 4.3 அலகுகளாகப் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications