ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம்.. பொது மக்கள் பீதி !
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரகாண்ட் மாநில கார்வெல் மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களின் ஒரு சில இடங்கலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக பதிவானது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் நேற்று இரவு சுமார் 10:52 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குர்கான், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இது 30 விநாடிகள் அளவுக்கு இருந்தது.












Click it and Unblock the Notifications