பலாத்காரம் செய்யப்பட்டதால் கொல்கத்தா உணவகத்திற்குள் நுழைய பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
கொல்கத்தா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பதால் ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் கொல்கத்தாவில் இருக்கும் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் பார்க் தெருவில் 40 வயதான ஆங்கிலோ இந்திய பெண் கடந்த 2012ம் ஆண்டில் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள ஜிஞ்சர் என்ற பார் வசதி கொண்ட உணவகத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அவரை உணவகத்திற்குள் நுழையவிடாமல் உணவக நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த பெண் கூறுகையில்,
நான் பலாத்காரம் செய்யப்பட்டவள் என்பதால் என்னை உணவகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நான் பலாத்காரம் செய்யப்பட்டது என் தவறா? நான் சாதாரணமாக வாழ முயற்சி செய்யக் கூடாதா என்றார்.
இது பற்றி உணவக உரிமையாளர் திப்தன் பானர்ஜி கூறுகையில்,
அவர் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பதால் அனுமதி மறுக்கவில்லை. அவர் ஏற்கனவே எங்கள் உணவகத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளார். அவர் குடித்துவிட்டு போதையில் பிரச்சனை செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால் தான் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றார்.
2 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடும் காரில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் மீது நீதிமன்றம் குற்றம்சாட்டியும் 3 பேர் மட்டும் தான் சிறையைில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகள் 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications