தேர்தலால் வெளியில் வந்த ரூ. 60,000 கோடி பண புழக்கம்.. ரிசர்வ் வங்கி உஷார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் மத்தியில் ரூ.60 ஆயிரம் கோடி புழங்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியதை, தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்.

இரு தினங்கள் முன்பு ரகுராம் ராஜன் இத்தகவலை கூறியிருந்தார். மக்கள் கைகளில் வழக்கத்துக்கு மாறாக பணம் புழங்குவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

EC aks RBI to give inputs over Rs 60,000 cr money ciruculation

இதுகுறித்து நஜிம் ஜைதி இன்று கூறுகையில், ரிசர்வ் வங்கி தலைவர் கூறியுள்ள கருத்து முக்கியமானது. அதை கவனத்தில் எடுப்போம். ரிசர்வ் வங்கியுடன், தேர்தல் ஆணையம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியதற்கான காரணங்கள், பண புழக்கத்தின் மூல ஆதாரம் பற்றிய தகவல்களை சேகரிப்போம்.

வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் தாக்கல் செய்த சொத்துக்களுக்கள், வருவாய்க்கு தக்கபடி வருமான வரி செலுத்தியுள்ளார்களா என்பதை சோதித்து அறிய வருமான வரித்துறையை கேட்டுக்கொண்டுள்ளோம். இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அந்த வேட்பாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு நஜிம் ஜைதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+