காங். வேட்பாளரை 'வளைத்ததை' அம்லப்படுத்திய 'டேப்'..சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி!
ராய்பூர்: சத்தீஸ்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை பணம் கொடுத்து ஆளும் பா.ஜ.க. வாங்கியதை அம்பலப்படுத்தும் டேப் ஆதாரம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளதால் சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரமண்சிங் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கர் மாவட்டத்தில் உள்ள அந்தகார் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மந்துராம் பவார் நிறுத்தப்பட்டார். ஆனால் திடீரென அவர் தாம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால் பா.ஜ.க. வேட்பாளர் மிக எளிதாக வெற்றி பெற்றார்.
ஆளும் பா.ஜ.க. தான் பணம் கொடுத்து மந்துராம் பவாரை விலைக்கு வாங்கப்பட்டதாக அப்போதே தேர்தல் ஆணையத்துக்கு புகாரும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மந்துராம் பவாரை பணம் கொடுத்து வளைப்பது தொடர்பாக ஆடியோ டேப் உரையாடல் நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆடியோவில் மந்துராம் பவாருக்கு ரமண்சிங்கின் உறவினர் பணம் கொடுத்து விலைபேசுவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது சத்தீஸ்கர் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணைய, சத்தீஸ்கர் தேர்தல் ஆணையத்துக்கு உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications