கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் ரெய்ட்
வாரணாசி: அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது முறைகேடு புகார் எதையும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.
'ஏஏபி கி கிராந்தி' என்ற பெயர் கொண்ட செய்தித்தாள்கள் 60 லட்சம் பிரதிகளை கேஜ்ரிவால் தனது வாரணாசி கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளார் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிரடியாக கேஜ்ரிவால் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால் அங்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் பத்திரிகை பிரதிகள் மட்டுமே இருந்தன. தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி 2 லட்சம் பிரதிகளை வினியோகிக்க உள்ளதாக கூறி அனுமதி பெற்றிருந்ததால் இது விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் பிரேமா கூறுகையில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது.
நரேந்திரமோடி வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது டி-சட்டை, சேலைகள் வினியோகிக்கப்பட்டன. அதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் மீது அளிக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications