தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது... விஷாலுக்கு கை விரித்தது தேர்தல் ஆணையம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு தொடர்பாக தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
Recommended Video

டெல்லி : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அதிகாரி எடுத்த முடிவு இறுதியானது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த திங்கள்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேபோல் விஷாலும், ஜெ.தீபாவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து வேட்புமனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது தீபாவின் வேட்புமனுவில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யவில்லை என்பதால் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

ஏற்றுக் கொண்டு பின்னர் நிராகரிப்பு
விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று காலை முதலே திமுகவும் அதிமுகவும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் விஷாலின் வேட்புமனுவை இறுதியில் ஆய்வு செய்தார் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி. அப்போது முன்மொழிந்தவர்கள் 2 பேர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து அல்ல என்று கூறியதால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு ஏற்பு
இதையடுத்து விஷால் தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகம் முன்பு சாலையில் தர்ணா போராட்டம் நடத்தினார். மேலும் முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பின்னர் போலீஸார் சமாதானப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்த கூறினர். இதையடுத்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தான் போட்டியிடுவதற்கான காரணங்களை கூறி தனது வேட்புமனுவை ஏற்குமாறு
விஷால் வேண்டுகோள் விடுத்தார். இதனால் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதாக அதிகாரி அறிவித்தார். ஆனால் விஷால் வீடு திரும்பிய சில மணி நேரத்தில் வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமரிடம் முறையீடு
இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் தனக்கு தெரியாமல் வேட்புமனுவை நிராகரித்துவிட்டதாக கூறி நடந்தவற்றை ஜனாதிபதி ராம் கோவிந்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் டுவிட்டரில் புகாராக அனுப்பினார். மேலும் தனது வேட்புமனு மீண்டும் பரிசீலனை செய்ய கூறி இந்திய தேர்தல் ஆணையத்திலும் விஷால் மனு தாக்கல் செய்தார்.

முடிவு சரியானது
இந்நிலையில் விஷாலின் மனு மீது தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது. விஷாலின் மனுவை பரிசீலனை செய்வது குறித்து தேர்தல் அதிகாரியிடமே அவர் முறையிடலாம் என்று பதில் அளித்துள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications