நிலக் கொள்ளை வழக்கு: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவின் இரு நண்பர்கள் திடீர் கைது!
டெல்லி: பிகானீர் நிலக் கொள்ளை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் இரு நண்பர்களை அமலாக்கப் பிரிவு அதிரடியாக கைது செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அமலாக்கப் பிரிவு இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிகாரிகள் துணையுடன் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு ராபர்ட் வதேராவின் நிறுவனம் விற்பனை செய்தது என்பது புகார். ஹரியானாலும் இத்தகைய புகார் வதேராவின் நிறுவனம் மீது எழுந்தது. இதனை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்கிற அதிகாரி பந்தாடப்பட்டு பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.

இதனிடையே ராஜஸ்தானில் வதேரா நிறுவனம் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க பாஜக அரசு பரிந்துரை செய்திருந்தது. மேலும் நில ஊழல் விவகாரங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் பிகானீர் நில ஊழல் விவகாரத்தில் ஜெய்பிரகாஷ் பஹர்வா மற்றும் அசோக் குமார் ஆகியோரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவர்களுக்கும் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலடி நிறுவனத்துக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே சோனியா காந்தியின் மருமகன் வதேராவின் நிறுவனத்தை குறிவைத்து அமலாக்கப் பிரிவு களமிறங்கியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications