நிலக் கொள்ளை வழக்கு: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவின் இரு நண்பர்கள் திடீர் கைது!
டெல்லி: பிகானீர் நிலக் கொள்ளை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் இரு நண்பர்களை அமலாக்கப் பிரிவு அதிரடியாக கைது செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அமலாக்கப் பிரிவு இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிகாரிகள் துணையுடன் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு ராபர்ட் வதேராவின் நிறுவனம் விற்பனை செய்தது என்பது புகார். ஹரியானாலும் இத்தகைய புகார் வதேராவின் நிறுவனம் மீது எழுந்தது. இதனை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்கிற அதிகாரி பந்தாடப்பட்டு பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.

இதனிடையே ராஜஸ்தானில் வதேரா நிறுவனம் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க பாஜக அரசு பரிந்துரை செய்திருந்தது. மேலும் நில ஊழல் விவகாரங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் பிகானீர் நில ஊழல் விவகாரத்தில் ஜெய்பிரகாஷ் பஹர்வா மற்றும் அசோக் குமார் ஆகியோரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவர்களுக்கும் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலடி நிறுவனத்துக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே சோனியா காந்தியின் மருமகன் வதேராவின் நிறுவனத்தை குறிவைத்து அமலாக்கப் பிரிவு களமிறங்கியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications