மல்லையா, 6 கிங்பிஷர் நிர்வாகிகள் மீது பண மோசடி வழக்கு!
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கப் பிரிவு பண மோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.
ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ. 900 கோடி கடனை திருப்பிச் செலுத்தாது தொடர்பான வழக்கு இது. மல்லையாவுடன் சேர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ள 6 பேரும் கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் ஆவர். ஏற்கனவே இவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டு எப்ஐஆர் போடப்பட்டது. அதன் அடிப்படையில் இவர்கள் மீது தற்போது அமலாக்கப் பிரிவு வழக்குப் போட்டுள்ளது.

சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி, மத்திய கடன் மீட்பு தீர்ப்பாயத்தை அணுகி, விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட கடனை வசூலித்துத் தருமாறும், அதற்கு வசதியாக அவரைக் கைது செய்யுமாறும் கோரியிருந்தது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஸ்டேட் பாங்க் கடன் அளித்திருந்தது
கிங்பிஷர் நிறுவனத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 நிறுவனங்கள் 7 ஆயிரம் கோடி வரை கடன் அளித்திருந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்டவையும் கடன் அளித்துள்ளன. ஆனால் எந்தக் கடனையும் மல்லையா திருப்பித் தரவில்லை.
இதையடுத்து கடந்த ஆண்டு அவரை defaulter என ஸ்டேட் வங்கி அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியும் defaulter ஆக அறிவித்தது.
இதையடுத்து மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனம் கையகப்படுத்தியது. மேலும் மல்லையாவுக்கு ரூ. 515 கோடி கொடுத்து செட்டில்செய்து தலைவர் பதவிலிருந்தும் அனுப்பிவைத்து விட்டது. இதனால் விரைவில் நாட்டை விட்டு மல்லையா எஸ்கேப் ஆகலாம் என்ற பரபரப்பு கிளம்பியது.
இதையடுத்து சுதாரித்த வங்கிகள் மல்லையாவை தப்பிவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில்தான் மல்லையா உள்ளிட்ட 7 பேர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications