மல்லையா, 6 கிங்பிஷர் நிர்வாகிகள் மீது பண மோசடி வழக்கு!
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கப் பிரிவு பண மோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.
ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ. 900 கோடி கடனை திருப்பிச் செலுத்தாது தொடர்பான வழக்கு இது. மல்லையாவுடன் சேர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ள 6 பேரும் கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் ஆவர். ஏற்கனவே இவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டு எப்ஐஆர் போடப்பட்டது. அதன் அடிப்படையில் இவர்கள் மீது தற்போது அமலாக்கப் பிரிவு வழக்குப் போட்டுள்ளது.

சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி, மத்திய கடன் மீட்பு தீர்ப்பாயத்தை அணுகி, விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட கடனை வசூலித்துத் தருமாறும், அதற்கு வசதியாக அவரைக் கைது செய்யுமாறும் கோரியிருந்தது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஸ்டேட் பாங்க் கடன் அளித்திருந்தது
கிங்பிஷர் நிறுவனத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 நிறுவனங்கள் 7 ஆயிரம் கோடி வரை கடன் அளித்திருந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்டவையும் கடன் அளித்துள்ளன. ஆனால் எந்தக் கடனையும் மல்லையா திருப்பித் தரவில்லை.
இதையடுத்து கடந்த ஆண்டு அவரை defaulter என ஸ்டேட் வங்கி அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியும் defaulter ஆக அறிவித்தது.
இதையடுத்து மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனம் கையகப்படுத்தியது. மேலும் மல்லையாவுக்கு ரூ. 515 கோடி கொடுத்து செட்டில்செய்து தலைவர் பதவிலிருந்தும் அனுப்பிவைத்து விட்டது. இதனால் விரைவில் நாட்டை விட்டு மல்லையா எஸ்கேப் ஆகலாம் என்ற பரபரப்பு கிளம்பியது.
இதையடுத்து சுதாரித்த வங்கிகள் மல்லையாவை தப்பிவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில்தான் மல்லையா உள்ளிட்ட 7 பேர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications