நில மோசடி புகார்.. ராபர்ட் வத்ரா நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
டெல்லி: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நில மோசடி தொடர்பாக இச்சோதனைகள் பரிதாபாத் நகரில் காலை முதல் நடந்து வருகின்றன. ராபர்ட் வத்ராவின் நண்பர்கள் வீடுகள், சொந்தமான இடங்களில் சோதனைகள் நடக்கின்றன.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் சகோதரர் வீடும் ரெய்டுக்கு தப்பவில்லை. பிரியங்கா காந்தி கணவரான ராபர்ட் வத்ரா மீது பல்வேறு நில மோசடி புகார்கள் கூறப்பட்டு வந்தாலும், அவற்றை காங்கிரஸ் கட்சி மறுத்து வந்துள்ளது.
ராபர்ட் வத்ராவின் நிறுவனம் மற்றும் டிஎல்எப் நிறுவனங்கள் நடுவேயான டீலை ரத்து செய்த ஐஏஎஸ்ஸ அதிகாரி அசோக் கேம்கா என்பவர் 2012ம் ஆண்டு பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது, நில மோசடிகள் ஒவ்வொன்றாக விசாரணை நடந்து வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் ரெய்டுக்கும் பிகானீர் நில மோசடிக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications