அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளை மேம்படுத்த முயற்சி: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தேசிய மொழிகளை மேம்படுத்த அனைத்து முயற்சியும் செய்யப்படும் என்றும், இந்தி பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு துறைகளுக்கு அவ்வப்போது உத்தரவிடப்படும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் கூறுகையில்,
சமஸ்கிருதம் கற்பவர்களால் எந்த மொழியையும் கற்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டுள்ளது. அரசின் அதிகார்ப்பூரவ மொழிகளை மேம்படுத்த முயற்சி செய்கையில் அரசு வேலைகளில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தவறு இல்லை என்றார்.
இந்தி பயன்பாடு குறித்து வெள்ளை அறிக்கைவிட வேண்டும் என்று பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதற்கு இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறுகையில்,
இந்தி பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அரசு அவ்வப்போது பல்வேறு துறைகளுக்கு தெரிவித்து வருகிறது. நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளதை பின்பற்றுகிறோம். அரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் துறை இந்தி மொழியில் டைப் செய்ய, கம்ப்யூட்டர்களில் இந்தியை பயன்படுத்த பயிற்சி அளிக்கும். மேலும் இந்தி பயன்பாட்டிற்காக ஐடி உபகரணங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.