மேற்கு வங்க ஓட்டுச்சாவடியில் தொண்டர்களிடையே மோதல்- 10 பேர் காயம்- 3 பேர் கைது
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஓட்டுச் சாவடியில் வெவ்வேறு கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இன்று 5 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும், இடதுசாரியும், காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் ஒரு கோடிக்கும் மேல் வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள இரண்டு ஓட்டுச் சாவடிகளில் வாக்குப்பதிவின் போது கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மால்டாவில் 6 பேரும், மற்றொரு சம்பவத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்க இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவில் 39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications