பெங்களூரில் பள்ளி வேன் ஏறி 8 வயது சிறுமி உடல் நசுங்கி பலி

பெங்களூர் சந்திரா லே அவுட்டில் உள்ளது சித்தகங்கா பப்ளிக் ஸ்கூல். அந்த பள்ளியில் சந்திரா லே அவுட்டைச் சேர்ந்த நமீதா(8) 2ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை பள்ளி முடிந்த பிறகு அவர் பள்ளி வேனில் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு முன்பு இறங்கிய அவர் தனது பையை வாகனத்திலேயே வைத்துவிட்டார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் பையை தூக்கி ஜன்னல் வழியாக கீழே போட்டனர். வேனின் சக்கரம் அருகே விழுந்த பையை நமீதா குனிந்து எடுத்துள்ளார்.
அப்போது டிரைவர் வேனை எடுக்க நமீதா நிலைதடுமாறி விழ அவர் மீது வாகனம் ஏறியது. இதில் உடல் நசுங்கிய அவரை உடனே நாகர்பவியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நமீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வேன் டிரைவர் பிரோஸ் கான்(26) என்பவரை கைது செய்தனர். பிரோஸ் அந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக வேன் டிரைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications