மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.. மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிஷ்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அஸ்ஸாமிற்கு மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கூறியது.

8கட்டமாக தேர்தல்
ஆனால் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் இந்த முறை 8 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக மார்ச் 27 ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 ஆம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 1 ஆம்தேதியும், 3 ஆம் கட்டமாக ஏப்ரல் 6 ஆம்தேதியும் 4 ஆம் கட்டமாக ஏப்ரல் 10 ஆம்தேதி 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

8ம் கட்ட தேர்தல்
ஏப்ரல் 17 ல் ஐந்தாம் கட்டமாகவும், ஏப்ரல் 22 ஆறாம் கட்டமாகவும், ஏப்ரல் 26 ஆம்தேதி ஏழாம் கட்டமாகவும், ஏப்ரல் 29 ஆம் தேதி 8 ஆம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை
தேர்தல் நேரத்தில் வன்முறை நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தலை மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளதாக கூறியுள்ளது, ஆனால் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வங்கத்தின் மகள்
மம்தா கூறுகையில், பிற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் மோடியும் அமித் ஷாவும் விரிவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாகவே இவ்வாறு தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் பாஜக எவ்வளவு தந்திரங்களை மேற்கொண்டாலும் தேர்தலில் தாங்கள்தான் ஜெயிக்கப்போகிறோம். நான் வங்கத்தின் மகள். மண்ணின் மக்களை பற்றி பாஜகவை விட நான் அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications