அமேசான் நிறுவன குடோனில் ரூ.10 லட்சம் மொபைல் போன்களை திருடிய ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
மும்பை: அமேசான் நிறுவனத்தின் குடோனில் இருந்து ரூ.10.37 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள அமேசான் நிறுவன குடோனில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

"தங்களது குடோனிலிருந்து மே 22ம் தேதி 17 செல்போன்கள் திருடப்பட்டதாக அமேசான் எங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தது" என்கிறார் பட்கா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் போஸ்லே.
இதுதொடர்பாக 5 ஊழியர்கள் மீது அமேசான் புகார் அளித்துள்ளதாம். திருடுபோனவை உயர்தர போன்கள் என்பதால் அதன் மதிப்பு ரூ.10.37 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில், அதே குடோனில் கடந்த 29ம் தேதி ரூ.7500 மதிப்புள்ள செல்போனை திருடிய ஆகாஷ் சபத் என்ற ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications