பெண்கள் மேம்பாட்டுக்கு உதாரணமாக திகழ்கிறது தமிழகம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
டெல்லி: பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழகம் சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக மத்திய வர்த்தகம், தொழில் துறை தனிப் பொறுப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடமாக எப்போதுமே திகழ்ந்து வருகிறது. நானும் இதில் பங்கு வகிக்கிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த பெருமையாக உள்ளது.

கல்வி நிறுனங்கள், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், பெண்கள் மேம்பாட்டுக்கும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
அந்த வகையில், நூற்றாண்டைக் கடந்துள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சிறந்த கல்விச் சூழலை மாணவிகளுக்கு உருவாக்கித் தருவதோடு, பெண்கள் மேம்பாட்டுக்கும் அடித்தளமிட்டு வருவது பாராட்டுக்குரியது" என்றார்.
பின்னர், விழாவில் கல்லூரியின் நூற்றாண்டு லோகோவை அறிமுகம் செய்துவைத்தார். விழாவில் பங்கேற்ற கல்லூரி முன்னாள் மாணவியும், தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் முதல் பெண் இயக்குநருமான அருணா பஹுகுனா பேசுகையில், "காவலர் பயிற்சி அகாடமியில் பயிற்சிக்காக வருபவர்களுக்கு நன்னெறிகளைக் கற்றுக்கொடுப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, கல்லூரிகள் நன்னெறிகளைக் கற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications