நேற்று ஒரேநாளில் 10பேர் பலி: உ.பி.யில் மூளையழற்சி நோயால் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்வு
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் மூளையழற்சி நோய்க்கு நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூளையழற்சி நோயினால் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது,
கிழக்கு உத்தரபிரதேசத்தில் வாழும் மக்களை பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் என்சபேலிடிஸ் எனப்படும் மூளையழற்சி நோய் தாக்கி வருகிறது. தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்றவையே இந்த நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்.
இந்நோய் தீவிர நிலையை எட்டும்போது தசைவலிப்பு, இழுப்பு, உடல் நடுக்கம், நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இறுதியில் மரணம் உண்டாவதற்குரிய வாய்ப்புகள் அதிகம்.
உ.பி.மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 1861 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், நேற்று மட்டும் 10 பேர் பலியானதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 188 மூளை அழற்சி நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications