சென்னை உட்பட 6 உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகளுக்கு முத்திரை இல்லை!

சென்னை உட்பட 6 விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகள் மூடி முத்திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை உட்பட 6 விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகள் மூடி முத்திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் விரைவாக செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சின் உள்ளிட்ட விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஹேன்ட் பேக்குகளை சீல் வைக்காமல் அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.

End handbag stamping for domestic flyers at six more airports including Chennai

இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னை, ஜெய்பூர், லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களில் இந்த முயற்சியை மேற்கொள்ள விமான போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு உள்நாட்டு முனையங்களில் மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமான நிலையங்களில் இருந்து பயணிகள் விரைவாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேன்ட் பேக்குகள் ஆய்வு மட்டுமே செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+