மோடியை பார்த்து கசாப்பு கடைக்காரரே வெட்கப்படுவார்: இது லாலு தாக்கு
பாட்னா: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றால் கசாப்பு கடைக்காரர்கள் கூட வெட்கப்படுவார்கள் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நரேந்திர மோடி கடுமையாக விமர்சிக்க, அந்த கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என்று சாடினர். மேலும் தமது சொந்த மனைவியையே வைத்து பாதுகாக்க முடியாத நபரால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் தமது பங்குக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் மோடியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாட்னாவில் பேசிய லாலு பிரசாத் யாதவ், இந்த மனிதரெல்லாம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பதா? என்று நரேந்திர மோடியைப் பார்த்து கசாப்பு கடைக்காரரே வெட்கப்படுவர் என்று கூறி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.