ஒருபக்கம் ஒளிரும் குஜராத்!… மறுபக்கம் நோஞ்சான் குழந்தைகள்!!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எடைகுறைந்து காணப்படுவதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் ( சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று அம்மாநில முதல்வரும், பாரதீயஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அம்மாநிலத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள தகவலை அம்பலப்படுத்தி உள்ளது சிஏஜி அறிக்கை.

குழந்தை வளர்ச்சி திட்டம்
குஜராத் மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியது.

அங்கன்வாடி மையங்கள்
மாநிலம் முழுவதும் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவையாக உள்ள நிலையில், 52,137 மையங்களுக்கு ( 69 சதவீதம்) மட்டுமே அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலும் 50,225 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

திட்டத்தால் பயனில்லை
இந்த திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் பயனாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 63.37 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்றும், இதற்கு போதுமான அங்கன்வாடி மையங்களை அரசு அமைக்காததே காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

96 நாட்கள்தான்
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தது 300 நாட்களாவது பயனாளிகளாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 96 நாட்கள் மட்டுமே ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுள்ளது.

3ல்1 குழந்தை
இதனால் குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைந்த, ஊட்டச்சத்து குன்றிய குழந்தையாக காணப்படுகிறது.

மாநில அரசுக்கு அக்கறையில்லை
கூடுதல் மையங்கள் அமைக்க மத்திய அரசு தரப்பில் உதவிக்கரம் நீட்டப்பட்டபோதும், மாநில அரசு அதில் அக்கறை காண்பிக்கப்படவில்லை என சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அடிப்படை வசதியில்லை
மேலும் செயல்பாட்டில் உள்ள 40 சதவீத அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகளான கட்டடம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சரிவர இல்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எந்த திட்டமும் இல்லை
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த 2008 ஆம் ஆண்டே மத்திய அரசு, குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியபோதிலும், குஜராத் அரசு அது தொடர்பாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications