ஒருபக்கம் ஒளிரும் குஜராத்!… மறுபக்கம் நோஞ்சான் குழந்தைகள்!!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எடைகுறைந்து காணப்படுவதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் ( சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று அம்மாநில முதல்வரும், பாரதீயஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அம்மாநிலத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள தகவலை அம்பலப்படுத்தி உள்ளது சிஏஜி அறிக்கை.

குழந்தை வளர்ச்சி திட்டம்
குஜராத் மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியது.

அங்கன்வாடி மையங்கள்
மாநிலம் முழுவதும் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவையாக உள்ள நிலையில், 52,137 மையங்களுக்கு ( 69 சதவீதம்) மட்டுமே அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலும் 50,225 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

திட்டத்தால் பயனில்லை
இந்த திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் பயனாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 63.37 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்றும், இதற்கு போதுமான அங்கன்வாடி மையங்களை அரசு அமைக்காததே காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

96 நாட்கள்தான்
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தது 300 நாட்களாவது பயனாளிகளாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 96 நாட்கள் மட்டுமே ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுள்ளது.

3ல்1 குழந்தை
இதனால் குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைந்த, ஊட்டச்சத்து குன்றிய குழந்தையாக காணப்படுகிறது.

மாநில அரசுக்கு அக்கறையில்லை
கூடுதல் மையங்கள் அமைக்க மத்திய அரசு தரப்பில் உதவிக்கரம் நீட்டப்பட்டபோதும், மாநில அரசு அதில் அக்கறை காண்பிக்கப்படவில்லை என சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அடிப்படை வசதியில்லை
மேலும் செயல்பாட்டில் உள்ள 40 சதவீத அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகளான கட்டடம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சரிவர இல்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எந்த திட்டமும் இல்லை
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த 2008 ஆம் ஆண்டே மத்திய அரசு, குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியபோதிலும், குஜராத் அரசு அது தொடர்பாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குளியலறைக்குள் ஊசியுடன் நுழைந்த இரு தோழிகள்.. கூகுளில் இதையா தேடினார்கள்? வாயடைத்து போன குஜராத் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications