Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்ட் முதல்வராக 3-வது முறையாக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்- அமலாக்கத்துறை ஆக்‌ஷன் என்ன?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார். ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்., ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 3- வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்த "இந்தியா" கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார்.

jharkhand assembly election 2024 hemant soren 2024

ஹேமந்த் சோரன் மீது நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளைத் தொடர்ந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் புதிய முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கல்பனாவுக்கு ஆதரவு இல்லை என்பதால் சீனியரான சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் ஜாமீன் மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், அவர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமுமே இல்லை என கூறி ஜாமீனில் விடுதலை செய்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடும் செய்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது சம்பாய் சோரன் தரப்பில் லேசான அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாம். ஆனாலும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வராக இருப்பதுதான் சரி என பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சம்பாய் சோரன் தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஹேமந்த் சோரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனடிப்படையில் இன்று மாலை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 3-வது முறை பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.

அதே நேரத்தில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை தொடர்ந்து பதவியில் நீடிக்க விடுமா? என்கிற கேள்வியும் தொடரத்தான் செய்கிறது என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+