Exclusive: காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு பாகிஸ்தானின் 'சம்பளம்' ரூ.45 லட்சம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் இளைஞர்களை வாக்களிக்க விடாமல் பிரச்சாரம் செய்வதற்காக அம்மாநில பிரிவினைவாதி தலைவர் யாசின் மாலிக்கிற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கட்டளை பிறப்பித்துள்ள ரகசிய தகவல் அம்பலமாகியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கில், பிரிவினைவாதிகள் செயல்படுகிறார்கள். அதில் முக்கியமானவர் யாசின் மாலிக். இந்தியாவுக்கும், இந்திய ராணுவத்துக்கும் எதிரான கருத்துக்களை காஷ்மீர் மக்களிடையே பரப்பிவருகிறார் இவர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் வருகிற 25-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்களித்தால், அம்மக்கள் இந்திய ஜனநாயகத்தோடு இயைந்து போகிறவர்கள் என்ற எண்ணம் உலக நாடுகளுக்கு ஏற்படும். இதை தடுக்க தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை குறைத்து, இந்தியாவுடன் வாழ காஷ்மீரிகள் விரும்பவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க ஐஎஸ்ஐ அமைப்பு விரும்புகிறது.
தங்களது கெட்ட நோக்கத்திற்கான தூதுவராக யாசின் மாலிக்கை நியமித்துள்ளது ஐஎஸ்ஐ. இதற்காக ஐஎஸ்ஐ அமைப்பின் ரிமோட் கன்ட்ரோலாக செயல்படும், ஹபீஸ் சையது மூலமாக யாசின் மாலிக்கிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளன. யாசின் மாலிக்கின் தொலைபேசி பேச்சை இடை மறித்து கேட்ட இந்திய உளவுத்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் உளவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் ஹபீஸ் சையது இன்னும் வசிக்கிறார். அவர்தான் யாசின் மாலிக்கை தொடர்பு கொண்டு சதி திட்டங்களை செயல்படுத்த கட்டளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் பதிவான தொலைபேசி உரையாடலில், காஷ்மீர் தேர்தலை எப்படியாவது சீர் குலைத்து விட வேண்டும் என்று யாசின் மாலிக்கிற்கு கட்டளை வந்தது. குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க வேண்டும், வாக்குப்பதிவு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்பது யாசின் மாலிக்கிற்கு தரப்பட்டுள்ள அசைன்மெண்ட்.
இந்திய அரசு உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை, காஷ்மீரிகளுக்கு எதிராக இந்திய ராணும் கொடுமைகளை இழைக்கிறது என்பது போல தொடர்ந்து சொல்லி, இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்ய வேண்டும் என்று யாசின் மாலிக்கிற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளையை சிறப்பாக செய்து முடித்தால் உரிய பரிசுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தலை சீர்குலைக்க எங்களிடம் 300 பேர்கள் தயாராக உள்ளனர். இருப்பினும் இந்தியாவிற்குள் ஊடுருவ இப்போது கடினமாக உள்ளது. பிரச்சினை உள்ளிருந்தே வெடிக்க வேண்டும். அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஹபீஸ் சையது, யாசின் மாலிக்கிடம் கூறியுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாதா மாதம், யாசின் மாலிக்கிற்கு ரூ.45 லட்சத்தை 'சம்பளமாக' ஐஎஸ்ஐ கொடுத்து வரும் தகவலையும் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த பணம், நேபாள நாடு வழியாக யாசின் கைகளுக்கு வந்து சேருகிறது. ரூ.20 லட்சம் மற்றும் 20 லட்சம் ரூபாய் என்று இரு தவணைகளாக மாதந்தோறும் அப்பணம் யாசினை சென்றடைகிறது. மிகப்பெரிய பங்களாக்கள், பண்ணை நிலங்களை காஷ்மீரில் வாங்கி குவித்துக் கொண்டுள்ளார் யாசின் மாலிக் என்கிறது உளவுத்துறை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications