இனி முகத்தை காட்டினால் போதும்.. விமானத்தில் பயணிக்கலாம்.. பெங்களூர் ஏர்போர்ட்டில் புது டெக்னலாஜி!
பெங்களூர் ஏர்போட்டில் ஆவணங்களை காட்டி விமானத்தில் பயணிப்பதற்கு பதிலாக முகத்தை மட்டுமே காட்டிவிட்டு பயணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட உள்ளது.
பெங்களூர்: பெங்களூர் ஏர்போட்டில் ஆவணங்களை காட்டி விமானத்தில் பயணிப்பதற்கு பதிலாக முகத்தை மட்டுமே காட்டிவிட்டு பயணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட உள்ளது.
பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) எனப்படும் தொழில்நுட்பம் தற்போது பல ஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது. நம்முடைய முகத்தை ஸ்கிரீன் முன் காட்டினால் அதுவே நம்மை அடையாளம் கண்டுபிடித்து, லைக்கை திறந்துவிடும். இதை தான் பெங்களூர் விமான நிலையத்தில் கொண்டு வர இருக்கிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் இந்த வசதி பெங்களூரில் வர உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

என்ன செய்ய போகிறார்கள்
இதன்படி, பெங்களுர் விமான நிலையத்தில் சில விமான சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளுக்கு ஆவண சோதனைகளை மொத்தமாக நிறுத்த போகிறார்கள். அதற்கு பதிலாக முகத்தை ஆராயும் பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) கருவிகளை வைக்க போகிறார்கள். நம்முடைய ஆதார் தகவல் மூலம் இதை வைத்து நம்மை அடையலாம் காண்பார்கள்.

ஏன் இப்படி
இதன் மூலம் பணிகள் மிகவும் வேகமாக நடக்கும். எந்த கவுண்டரிலும் நீங்கள் நிற்க வேண்டியது இல்லை. அதேபோல் ஒரு நொடியில் நீங்கள் யார், உங்கள் பின்புலம் என்னவென்று அதிகாரிகளுக்கு தெரியும். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்படும்.

எப்படி நடக்கும்
நாம் இதில் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) சாதனம் முன் போய் நின்றால் அதுவே நம் ஆதார் விவரங்களை வைத்து சோதனைகளை முடித்துவிடும். ஆதாருடன் பாஸ்போர்ட்டை இணைத்து இருக்கும் பட்சத்தில் அந்த சோதனையையும் முடித்துவிடும். டிக்கெட்டை மட்டும் காட்டிவிட்டு விமானத்தில் பயணிக்கலாம்.

ஆசியாவிலேயே பெரிது
ஆசியாவிலேயே இந்த முறை எங்குமே கிடையாது. முதல்முறையாக பெங்களூரில்தான் கொண்டு வரப்பட உள்ளது. அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் உலகிலேயே அதிக மக்கள் செல்லும் விமான நிலையத்தில் பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) பயன்படுத்தப்படும் விமான நிலையம் என்று பெயரை பெங்களூர் விமான நிலையம் பெறும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications